Thursday, February 14, 2013

என் எண்ணத்தில் கடவுள் முப்பொழுதும்


என்னிடம் உள்ளது ஒரு முத்து
எனக்கு மட்டுமல்ல அது சொத்து
என் மனம் பட்டது பாடு
அதில் எனக்கு   கிடைத்தது பெரு வீடு   
என்னை எடுத்துக் கொண்ட கடவுள்
தன்னை எனக்கு தந்தான் பெரு உள்
எனக்கு   இந்த பூமி  தாய்
என்னை தாயாக்கி ஆன என்  சேய்
நான் நடமாடும் இந்த நிலம்
பல நன் மக்கள் உருவாகும் களம்
அர்ப்பணித்தேன் என்னை இப்பொழுது
என் எண்ணத்தில் கடவுள் முப்பொழுதும் !  

No comments:

Post a Comment